திருவள்ளூர்: திருவள்ளூர் எஸ்.பி. அரவிந்தன் வெளியிட்ட அறிக்கை: திருவள்ளூர் மாவட்ட நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீறியதால், சில வணிக நிறுவனங்கள், கடைகளை போலீசார் எச்சரிக்கை செய்து, கடை விபரங்களை கொடுத்துள்ளனர். எவ்வித பிரச்னையும் வராமல் தடுக்க, விதிமுறைகளை கடுமையாக கடை உரிமையாளர்கள் கடைப்பிடிக்க வேண்டும். ஊழியர்கள் மற்றும் உரிமையாளர்கள், கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். முகக்கவசம் அணியாமல் வரும் வாடிக்கையாளர்களை, கடைக்குள் அனுமதிக்க கூடாது.