புழல்: செங்குன்றம் அருகே பம்மதுகுளம் மேட்டு தெருவை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மகன் முரளிதரன் (16). தனியார் பள்ளியில் படித்து பிளஸ் 2 தேர்வு எழுதியிருந்தான்.இந்நிலையில், பம்மதுகுளம் அருகே லட்சுமிபுரம் பகுதியில் உள்ள விவசாய கிணற்றில் நேற்று முன்தினம் மதியம் முரளிதரன் மற்றும் அவனது 6 நண்பர்களும் குளித்து கொண்டிருந்தனர். முரளிதரனுக்கு நீச்சல் தெரியாததால், ஆழமான பகுதியில் உள்ள சேற்றில் சிக்கி, நீருக்குள் மூழ்கினான். சக நண்பர்களால் அவனை மீட்க முடியவில்லை.