மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே உள்ள துணி கடையில் தீ விபத்து ஏற்பட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சன்னதிவாசல் அருகே உள்ள 3 மாடிகள் கொண்ட துணி கடையில் தீ கொழுந்துவிட்டு எரிந்தது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்களும் கோவில் பாதுகாப்பில் இருந்த போலீசாரும் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுப்பட்டனர்.