மருத்துவக் கல்வி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27% ஓபிசி இடஒதுக்கீடு கோரி அன்புமணி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் விரைவில் விசாரணை

சென்னை: மருத்துவக் கல்வி அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் 27 சதவீதம் ஓபிசி இட ஒதுக்கீடு கோரி உச்ச நீதிமன்றத்தில் பாமக இளைஞர் அணி தலைவர் அன்புமணி வழக்கு தொடர்ந்துள்ளார்.  இளநிலை மற்றும் முதுநிலை மருத்துவப் படிப்புக்கான அகில இந்திய தொகுப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான 27 சதவீதம் இட ஒதுக்கீடு நடைமுறைப்படுத்தக் கோரி உச்ச நீதிமன்றத்தில் பா.ம.க. இளைஞரணித் தலைவரும், மத்திய சுகாதாரத்துறையின் முன்னாள் அமைச்சருமான அன்புமணி வழக்குத் தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.

Related Stories: