×

சென்னையில் இருந்து சேலத்துக்கு விமானத்தில் வந்த பெண் உட்பட 5 பேருக்கு கொரோனா: மற்ற 51 பேரும் தனிமைப்படுத்தப்பட்டனர்

சேலம்: சென்னையில் இருந்து சேலத்திற்கு விமானத்தில் வந்த பெண் உள்பட, 5 பயணிகளுக்கு கொரோனா உறுதி ெசய்யப்பட்டுள்ளது. உடன் வந்த மற்ற 51 பேரும் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். உள்நாட்டு விமான சேவைகள் கடந்த 25ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த வகையில் 63 நாட்களுக்கு பிறகு சென்னையில் இருந்து 56 பயணிகளுடன் புறப்பட்ட விமானம், நேற்று முன்தினம் சேலம்  காமலாபுரம் விமான நிலையத்திற்கு வந்தது. பின்னர், இங்கிருந்து 48 பயணிகளுடன் விமானம் சென்னைக்கு திரும்பியது. சேலம் வந்த விமானத்தில் பயணித்த 56 பயணிகளுக்கும் சுகாதாரத்துறையினர் கொரோனா பரிசோதனைமேற்கொண்டனர். அனைவரையும் தனிமைப்படுத்தி வைத்தனர்.

பரிசோதனை முடிவுகள் நேற்று காலை வெளிவந்தது. இதில், ஒரு பெண் உட்பட 5 பயணிகளுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. சேலம் அரசு மருத்துவமனை ஐசோலேசன் வார்டில் அவர்கள் அனுமதிக்கப்பட்டனர். இது குறித்து சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘இவர்களுடன் பயணம் மேற்கொண்ட 51 பேரும், அவரவர் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. வெளியே வரவும், பிறரை சந்திப்பதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்களுடைய வீட்டை அடையாளப்படுத்தி தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்,’’ என்றனர்.

லவ் டார்ச்சரில் கைதான வாலிபருக்கும் நோய் ெதாற்று சேலம் அழகாபுரம் பெரியபுதூர் ஏடிசி நகரை சேர்ந்தவர் மேகநாதன்(33). பழ வியாபாரியான இவர், இரும்பாலை பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவருக்கு தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்துள்ளார். புகாரின்படி நேற்றுமுன்தினம் போலீசார் அவரை கைது செய்தனர். பின்னர் அரசு மருத்துவமனையில் நடந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா தொற்று இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து சிகிச்சைக்காக ேசர்க்கப்பட்டார். மேலும் மேகநாதனை கைது செய்தவர்கள் உட்பட 15 போலீசாரும் தனிமை முகாமுக்கு அழைத்து செல்லப்பட்டனர். இவர்களுக்கு நாளை கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.


Tags : Chennai ,Salem ,flight ,Corona , Chennai, Salem, Flight, Girl, Corona
× RELATED சென்னையில் இருந்து மொரிஷியஸ்...