புதுடெல்லி: ஆப்பிரிக்காவில் இருந்து கூட்டம் கூட்டமாக புறப்பட்ட வெட்டுக்கிளிகள் பாகிஸ்தானில் பயிர்களை நாசம் செய்து விட்டு, தற்போது ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், பஞ்சாப் அரியானா, மற்றும் உத்தரபிரதேச மாநிலங்களில் புகுந்து பயிர்களை நாசம் செய்து வருகின்றன. ராஜஸ்தானில் 20 மாவட்டங்களில் இவை கபளீகரம் செய்து வருகின்றன. இம்மாநிலத்தின் கங்கா நகர் பகுதியில் 4 ஆயிரம் ஹெக்டர் பயிர்களையும், நாகுர் பகுதியில் 100 ஹெக்டேர் பயிர்களையும் தின்று நாசம் செய்துள்ளன. ஜெய்ப்பூரில் குடியிருப்பு பகுதியிலும் வெட்டுக்கிளிகள் புகுந்து மரங்களை ஆக்கிரமித்துள்ளன. இதேபோல், உத்தரபிரதேசத்தில் 35 ஆயிரம் ஹெக்டேரில் பயிர்கள் வெட்டுக்கிளிகளால் நாசம் செய்யப்பட்டுள்ளன. இவற்றை ஒழிக்க கடும் நடவடிக்கையை மாநில அரசு எடுத்துள்ளது.