சென்னை : தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கை : இந்து சமய அறநிலையத்துறை, கோயில்களை திறந்து சமூக இடைவெளி, முகக்கவசம் உள்ளிட்ட அரசின் 100 சதவீத கோட்பாடுகளை நடைமுறைப்படுத்தி, சாமி தரிசனம் செய்வதற்கு பொது மக்களுக்கு அனுமதி அளிக்க ஆலோசனை செய்து நல்ல முடிவை அறிவிக்க வேண்டும். தமிழக அரசு ஜூன் மாதத்தில் - மாநிலத்தில் உள்ள இந்து கோயில்களை திறக்க ஆலோசனைகளை மேற்கொள்ளவும் மற்றும் பல்வேறு மத வழிபாட்டுத் தலங்களையும் அரசின் விதிமுறைகளைப் பயன்படுத்தி திறக்க ஆலோசனைகளை மேற்கொள்ளவும் முன்வர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.