×

புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

டெல்லி: புலம்பெயர் தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக தேசிய மனித உரிமை ஆணையம் குஜராத், பீகார் மாநில தலைமைச் செயலர்கள், ரெயில்வே வாரிய தலைவர், மத்திய உள்துறை செயலருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சொந்த ஊர் செல்லும் புலம்பெயர் தொழிலாளர்கள் உணவு, குடிநீர் இன்றி இருப்பதாக செய்திகள் வெளியானது. ஊடகங்களில் வெளியான செய்தியை அடுத்து விளக்கம் அளிக்குமாறு தேசிய மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.


Tags : National Human Rights Commission ,migrant workers , Migrant Workers, National Human Rights Commission, Notices
× RELATED வடமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு...