×

அக்னி நட்சத்திரம் நிறைவுபெறும் நாளில் தென்மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் இடியுடன் மழை; விவசாயிகள் மகிழ்ச்சி

நெல்லை: திருநெல்வேலி மாவட்டத்தில் இவ்வாண்டு கோடையின் அக்னி நட்சத்திரம் நிறைவுபெறும் நாளில் பல்வேறு இடங்களில் இடியுடன் மழை பெய்தது. அக்னி நட்சத்திரம் என்று அழைக்கப்படும் கத்திரி வெயில் இந்தாண்டு மே 4-ல் தொடங்கியது. இதனால் தமிழகத்தில் வெப்பத்தின் தாக்கம் கடுமையாக இருந்தது. இன்றுடன் அக்னி நட்சத்திரம் நிறைவுபெற்றது. இந்த காலகட்டத்தில் சூரிய ஒளி நேரடியாக பூமி மீது விழும். அதனால் வெப்பத்தின் தாக்கம் மிகக் கடுமையாக இருக்கும் என்று பஞ்சாங்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆனால், வானிலை ஆய்வு மைய தரவுகளில் அக்னி நட்சத்திரம் அல்லது கத்திரி வெயில் என்ற வார்த்தையே இல்லை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்நிலையில் நெல்லையில் இவ்வாண்டு கோடை வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் உம்பன் புயல் எதிரொலியாக அணைப்பகுதிகளிலும், பிறஇடங்களிலும் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்திருந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகரித்தது. திருநெல்வேலியில் பகல்நேர வெப்பநிலை 104 டிகிரி அளவுக்கு வெப்பம் தகித்தது. இந்நிலையில் இவ்வாண்டு கோடையின் அக்னி நட்சத்திரம் நிறைவு நாளான இன்று பிற்பகலில் திருநெல்வேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இடி, மின்னலுடன் கோடை மழை பெய்தது.

இதனால் காலையில் தகித்த வெப்பம் தணிந்தது. குளிர்ந்த காற்றும் வீசியது. மேலும் வேலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. காங்கேயநல்லூர், வள்ளலார், சத்துவாச்சாடி, காதிப்பட்டறை உள்ளிட்ட இடங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. தென்காசி மற்றும் அதன் சுற்றுவட்டார ஊர்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. ஆலங்குளம், சுரண்டை, பாவூர்சத்திரம், ரெட்டியார்பட்டி, வீரகேரளம்புதூர் உள்ளிட்ட ஊர்களில் மழை பெய்து வருகிறது.

Tags : Thunderstorms ,regions ,Agni ,locations , Agni star, rain, peasant
× RELATED பொதுமக்கள் பாராட்டு கறம்பக்குடி...