தேனி: பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் தொடர்புடைய சபரிராஜனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. சபரிராஜனின் ஜாமீன் மனு ஏற்கனவே தள்ளுபடியான நிலையில் மீண்டும் அவரது ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வீடியோ எடுத்து மிரட்டிய வழக்கில் 5 பேர் கைதாகியுள்ளனர்.