×

மேலூர் பகுதியில் நாய்கள் கடித்து குதறியதால் 2 புள்ளி மான்கள் பலி

மேலூர்: மேலூர் மற்றும் கொட்டாம்பட்டி பகுதியில் நேற்று ஒரே நாளில் நாய்கள் கடித்து குதறியதில் 2 புள்ள மான்கள் பலியானது. மேலூர் அருகே ஆட்டுக்குளம் பகுதியில் 2 வயதுள்ள பெண் புள்ளிமான் ஒன்று தண்ணீர் தேடி வந்தது. இது மதுரை சிவகங்கை மாவட்ட எல்லையில் உள்ள வெள்ளமலையில் இருந்து தண்ணீர் தேடியபடி வயல்பகுதி வழியாக வந்திருக்கலாம் என கூறப்பட்டது. தண்ணீர் தேடி வந்த இந்த மானை அப்பகுதியில் உள்ள நாய்கள் விரட்டி கடித்ததில் பலியானது.

மற்றொரு புள்ளிமான் கொட்டாம்பட்டி பகுதியில் உள்ள கொட்டகுளம் பகுதியில் தண்ணீர் தேடி வந்தது. 6 மாத பெண் புள்ளிமானான இதையும் அப்பகுதியில் சுற்றிய நாய்கள் கடித்து குதறியதில் மான் பலியானது. தகவலறிந்து வந்த வனத்துறை அதிகாரிகள் இரு மான்களின் சடலத்தையும் கைப்பற்றி அடக்கம் செய்தனர். ஒரே நாளில் 2 மான்கள் பலியானது இப்பகுதி மக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

Tags : 2 point, deer killed, dogs bite
× RELATED கலசப்பாக்கம் செய்யாற்றின் குறுக்கே...