சென்னை: வெளிநாட்டில் உள்ள உறவினர்களுடன் பேச நளினி மற்றும் முருகனுக்கு அனுமதி தர முடியாது என தமிழக அரசு மறுப்பு தெரிவித்துள்ளது. நளினி தாயார் தாக்கல் செய்த மனுவுக்கு தமிழக அரசு சார்பில் உயர்நீதிமன்றத்தில் பதில் மனுத்தாக்கல் செய்துள்ளது. வெளிநாடுகளில் உள்ளவர்களுடன் பேச கைதிகளை அனுமதிக்க சிறை விதிகளில் இடமில்லை என்று தமிழக அரசு கூறியுள்ளது.