போபால்: கொரோனாவை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கும் வகையில் மத்தியப்பிரதேசத்தில் அரசு உத்தரவை மீறுவோருக்கு ரூ.2,000 அபராதம் விதிக்க முடிவு முடிவு செய்துள்ளது. நாட்டில் கொரோனா அதிகம் பாதித்த முதல் 10 மாநிலங்களின் பட்டியலில் மத்திய பிரதேசமும் உள்ளது. இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 56,948 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,897 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 17,918 பேர் குணமடைந்துள்ளனர். அந்த வரிசையில் மத்தியப்பிரதேசத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7261-ஆக அதிகரித்துள்ளது. மேலும் இதுவரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு 313 பேர் உயிரிழந்த நிலையில் 3927 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.