திருப்பதி மலைப்பாதையில் அரியவகை தேவாங்கு குட்டிகள் பிடிபட்டன

திருமலை:  திருப்பதி மலைப்பாதையில் சுற்றித்திரிந்த அரியவகை தேவாங்கு குட்டிகள் பிடிபட்டது. ஊரடங்கு நேரத்தில்  திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.  எப்போதும் வாகனங்கள் வந்து சென்று கொண்டிருந்த மலைப்பாதையில் கடந்த இரண்டு மாதங்களாக எந்தவித வாகனங்களும் இல்லாமல் அமைதியான சூழல் நிலவி வருகிறது. இதனால் வனவிலங்குகள் தொடர்ந்து மலைப்பாதையில் வந்தபடி உள்ளது.

ஏற்கனவே பலமுறை சிறுத்தை, மலைப்பாம்பு, முள்ளம்பன்றி, கரடி, மான், கடமான் போன்றவை சாலைகளில் சுற்றிவரக்கூடிய நிலையில் நேற்று முன்தினம் அரிய வகையான 2 தேவாங்கு குட்டிகள், இரண்டாவது மலைப்பாதையில் பாஷ்யகார்ல சன்னதி அருகே சுற்றி வந்தது.

இதனைப்பார்த்த வனத்துறை அதிகாரிகள் அதனை பிடித்து மீண்டும் வனப்பகுதியில் கொண்டு சென்று விட்டனர். இந்த இரண்டு தேவாங்கு குட்டிகள் மீண்டும் சாலையை நோக்கி வந்தால் அதனை பிடித்து திருப்பதியில் உள்ள ஸ்ரீவெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவுக்கு கொண்டு செல்லப்படும் என வனத்துறை அதிகாரிகள்  தெரிவித்தனர்.

Related Stories: