திருமலை: திருப்பதி மலைப்பாதையில் சுற்றித்திரிந்த அரியவகை தேவாங்கு குட்டிகள் பிடிபட்டது. ஊரடங்கு நேரத்தில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பக்தர்கள் அனுமதிக்கப்படுவது முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. எப்போதும் வாகனங்கள் வந்து சென்று கொண்டிருந்த மலைப்பாதையில் கடந்த இரண்டு மாதங்களாக எந்தவித வாகனங்களும் இல்லாமல் அமைதியான சூழல் நிலவி வருகிறது. இதனால் வனவிலங்குகள் தொடர்ந்து மலைப்பாதையில் வந்தபடி உள்ளது.
ஏற்கனவே பலமுறை சிறுத்தை, மலைப்பாம்பு, முள்ளம்பன்றி, கரடி, மான், கடமான் போன்றவை சாலைகளில் சுற்றிவரக்கூடிய நிலையில் நேற்று முன்தினம் அரிய வகையான 2 தேவாங்கு குட்டிகள், இரண்டாவது மலைப்பாதையில் பாஷ்யகார்ல சன்னதி அருகே சுற்றி வந்தது.