×

மயிலாடுதுறை அருகே 30 ஆண்டுகளாக தண்ணீர் செல்லாத பாசன வாய்க்கால்: 10 அடி அகலத்திலிருந்து 2 அடியாக சுருங்கியது

மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே உள்ளது கோவாஞ்சேரி கிராமம். இந்த கிராமத்தில் உள்ள 325 ஏக்கர் விவசாய நிலத்திற்கு காவிரிநீர் 5 கி.மீ தூரத்தில் உள்ள வீரசோழனாற்றிலிருந்து கோவாஞ்சேரி வாய்க்கால் மூலம் தண்ணீர் கிடைத்து வந்தது. கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை வாய்க்காலை ஊர் மக்களே தூர்வாரி வந்தனர். 1000 குடும்பங்களை கொண்ட ஏரலாஞ்சேரி, கோவாஞ்சேரி கிராமத்தில் உள்ள 18 குளங்களும் நிரம்பி நிலத்தடிநீர் 30 அடியில் கிடைத்தது. கடந்த 30 ஆண்டுகளாக கோவாஞ்சேரி வாய்க்காலில் காவிரிநீர் வராததால் நிலத்தடி நீர்மட்டம் 200 அடி ஆழத்திற்கு கீழ் சென்று விட்டது. 10 அடி அகலத்திலிருந்த அந்த வாய்க்கால் தற்பொழுது 2 அடி முதல் 3 அடியாக சுருங்கிவிட்டது.

கோவாஞ்சேரி வாய்க்காலை தூர்வாரினால் மட்டுமே ஒட்டுமொத்த கிராமத்திற்கும் நன்மை என்பதால் கிராம மக்கள் ஆண்டு தோறும் அரசுக்கும், அதிகாரிகளுக்கும் மனு அனுப்பியும் எந்த பலனும் இல்லை. பக்கத்து ஊருக்குச் செல்லும் வாய்க்கால் தூர் வாரப்படுகிறது, ஆனால் கோவாஞ்சேரி வாய்க்கால் மட்டும் தூர்வாரப்படுவதில்லை. வாய்க்காலை மீட்டு தூர்வாரி அதில் காவிரி நீரை விடவேண்டும். அப்படி செய்யாதபட்சத்தில் ஊரடங்கு விலக்கி கொள்ளப்பட்டதும் பொதுப்பணித்துறை அலுவலகத்தை முற்றுகையிடுவது என்று ஊர்மக்கள் முடிவெடுத்துள்ளனர்.

Tags : irrigation drainage ,Mayiladuthurai , Near 30-year-old irrigation,drainage,Mayiladuthurai: 2 feet ,2 feet wide
× RELATED பதற்றமான வாக்குச்சாவடியில் பணியாற்ற...