சென்னை: ஜூன் 15 முதல் விசைப்படகு மீனவர்கள் 12 மணி நேரம் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் என கடல் உணவு ஏற்றுமதி சங்கம் அறிவித்துள்ளது. ஜப்பான் தவிர மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாத நிலையுள்ளதால் கடல் உணவு ஏற்றுமதி சங்கம் அறிவுரை வழங்கியுள்ளது. 12 மணி நேரம் மீன் பிடித்தால் இறால்கள் தரம் மேம்பாட்டுடன் இருக்கும் என்பதால் மீனவ சங்கங்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளது.