பெய்ஜிங்: கொரோனாவால் தனது எஜமானர் உயிரிழந்தது தெரியாமல் நாய் ஒன்று மருத்துவமனை வாசலிலேயே 3 மாதங்கள் அவருக்காக தவித்தபடியே காத்திருந்தது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது. சீனாவின் வூகான் நகரை சேர்ந்த நபர் ஒரு நாயை வளர்த்து வந்தார். அந்த நாய் அவரை விட்டு எங்கேயுமே போகாது. 7 வருடங்கள் எஜமானருக்கும், நாய்க்கும் ஒரு நெருக்கம் இருந்து கொண்டே இருந்தது. இந்நிலையில்தான் சீனாவில் கொரோனா கொடூரமாக தாண்டவமாடியது. அதில் எஜமானருக்கும் தொற்று வந்துவிட்டது. இதனால் தான் வளர்ந்து வந்த 7 வயது கலப்பின நாயுடன் கடந்த பிப்ரவரி மாதம் அதன் எஜமானர் கொரோனா சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால் நோயின் பாதிப்பில் இருந்து விடுபட முடியாமல் 7 நாட்களுக்கு முன்னர் எஜமானர் பரிதாபமாக பலியானார்.