செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அருகே விவசாயி சுப்பிரமணி என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்தார். வயலுக்குச் சென்றவர் விவசாய கிணற்றில் இறந்து கிடந்ததால் உறவினர்கள் அதிர்ச்சியடைந்தனர். விவசாயி சுப்பிரமணி மர்மமான முறையில் இறந்ததை அடுத்து சித்தாமூர் போலீஸ் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகிறது.