சென்னை: மாணவர்களிடம் கல்விக் கட்டணத்தை வசூலிப்பதில் கல்வி நிறுவனங்கள் நிர்பந்திக்காமல் செயல்பட வேண்டும் என யுஜிசி அறிவித்துள்ளது. கல்விக்கட்டணம் வசூல் செய்வது தொடர்பாக நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள், கல்லூரிக்கு யூஜிசி அறிவுறுத்தியுள்ளது. உயர்கல்வி நிறுவனங்கள், கல்விக் கட்டணத்தை செலுத்தக்கோரி மாணவர்கள், பெற்றோர்களை வற்புறுத்துவதாக புகார் எழுந்தது.