அச்சு ஊடகத்துக்கு நிவாரணம்: பிரதமருக்கு மதுரை எம்பி கடிதம்

மதுரை: அச்சு ஊடகத்துக்கு நிவாரண நடவடிக்கைகள் வேண்டுமென்று, பிரதமர் மோடிக்கு, மதுரை எம்பி சு.வெங்கடேசன் கடிதம் எழுதியுள்ளார்.மதுரை எம்பி சு.வெங்கடேசன் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்திருப்பதாவது: கோவிட் 19ன் கடும் பாதிப்புகள் அச்சு ஊடக செய்தி இதழ்களின் இருப்பையும், வாழ்வையும் கேள்விக்கு ஆளாக்கியுள்ளது. அச்சு செய்தித்தாள்  மீதான சுங்க வரியை கைவிட வேண்டும். நிலுவையில் உள்ள அரசு விளம்பர பாக்கிகளை உடனடியாக வழங்க வேண்டும். அரசு விளம்பரங்களுக்கு 100 சதவீதம் கட்டண உயர்வை வழங்க வேண்டும். அச்சு ஊடகங்களை அரசின் அறிவிப்புகளுக்கு பயன்படுத்த வேண்டும். இக்கோரிக்கைகளை விரைவில் ஏற்று நிவாரணம் வழங்குவீர்கள் என உறுதியாக நம்புகிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: