×

சோழவந்தானில் இருந்து செல்ல முடியாததால் மும்பையில் மகள் திருமணம் வீடியோ காலில் வாழ்த்திய பெற்றோர்

சோழவந்தான்: மதுரை மாவட்டம், சோழவந்தான் அருகே குருவித்துறையை சேர்ந்தவர்கள் கண்ணன் - மீனா தம்பதி. இவர்களது மகள் அர்ச்சனா, மும்பையில் உள்ள தனியார் கம்பெனியில் பணியாற்றி வருகிறார். கண்ணனின் மைத்துனர் மும்பையை சேர்ந்த சுபாஷ். இவரது மகன் ராஜேஷ்வர். கடந்த ஆண்டு அக்.30ம் தேதி ராஜேஷ்வருக்கும், அர்ச்சனாவுக்கும் நடந்த நிச்சயதார்த்தத்தில், மே 27ல் (நேற்று) குருவித்துறையில் திருமணம் நடத்த முடிவானது. அதன்பின் அர்ச்சனா மும்பைக்கு சென்றார். கொரோனா ஊரடங்கால் அர்ச்சனா ஊருக்கு திரும்ப முடியவில்லை. மேலும், நிச்சயித்த தேதியிலேயே திருமணம் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர். மும்பை செல்ல அர்ச்சனாவின் பெற்றோர், முயற்சி செய்தும் முடியவில்லை. இதையடுத்து நேற்று காலை மும்பையில் உள்ள சிட்லாதேவி மந்திரில்ராஜேஷ்வர் - அர்ச்சனாவின் திருமணம் நடைபெற்றது. இதை வீடியோகாலில் அர்ச்சனாவின் பெற்றோர் கண்ணீர் மல்க பார்வையிட்டு வாழ்த்தினர்.


Tags : Parents ,Mumbai , எ
× RELATED புகைப்பிடித்துக் கொண்டே விமான...