மதுரை: வவ்வால்கள் மூலம் கொரோனா தொற்று பரவுவதற்கான எந்த ஆராய்ச்சி தரவுகளும் இல்லை என்று மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. வவ்வால்ல்கள் ஆராய்ச்சியினை முழுமையாக செயல்படுத்தும் மையமாக மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் இருந்து வருகிறது. சீனாவில் உருவான கொரோனா வைரஸ் இன்றைய நிலையில் 200-க்கும் மேற்பட்ட நாடுகளில் வேகமாக பரவி மக்களை கொல்லும் பெரும் கொள்ளை நோயாக மாறியுள்ளது. சீனாவுக்கு அடுத்தபடியாக இத்தாலி, ஈரான், தென் கொரியா, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, அமெரிக்கா, ஸ்விட்சர்லாந்து ஆகிய நாடுகளில் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகமாக உள்ளது.