நெல்லை: கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்ள நெல்லை கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் தனது இருசக்கர வாகனத்திற்கு மேற்கூரை அமைத்து வலம் வருகிறார். நெல்லை மாவட்டத்தில் தற்போது கோடைகால அக்னி நட்சத்திர தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால் பகல் பொழுதில் நடந்து செல்பவர்களும், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் வியர்வை சிந்தி விரைவில் சோர்வடைகின்றனர். வயதானவர்கள் சொந்த பணிகளுக்காக பகல் நேரங்களில் வெளியில் வர முடியாத நிலை நீடிக்கிறது. குறிப்பாக இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் எப்போது வீடு திரும்புவோம் என்ற எண்ணத்தில் தவிக்கின்றனர் இந்த நிலையில் நெல்லை அடுத்துள்ள கீழநத்தம் கிராமத்தைச் சேர்ந்த சௌந்தரராஜன் (50) என்பவர் தனது இருசக்கர வாகனத்தில் கோடை வெயிலின் தாக்கத்தில் இருந்து காத்துக் கொள்ள மேற்கூரை அமைக்க முடிவு செய்தார்.