ராயபுரம் – 2,145, கோடம்பாக்கம் – 1,526, திரு.வி.க நகர் – 1,285.. நாளுக்கு நாள் சென்னையை துவம்சம் செய்யும் கொரோனா வைரஸ்!!

சென்னை : சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.சென்னையில் நேற்று புதிதாக 510 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு எண்ணிக்கை 11,640ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் சென்னை தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது.சென்னையில் இன்றைய நிலவரப்படி ராயபுரம் மண்டலத்தில் அதிகபட்சமாக 2,145 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் ராயபுரம், கோடம்பாக்கம், திரு.வி.க. நகர், தேனாம்பேட்டை, தண்டையார் பேட்டை மண்டலங்களில் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை ஆயிரமாக உயர்ந்துள்ளது. கொரோனா தொற்றிலிருந்து இதுவரை 5,504 பேர் குணமடைந்துள்ள நிலையில் 89 பேர் உயிரிழந்துள்ளனர்.

மண்டல வாரியாக பாதித்தவர்கள் எண்ணிக்கை :

ராயபுரம் – 2,145

கோடம்பாக்கம் – 1,526

திரு.வி.க நகரில் – 1,285

அண்ணா நகர் – 975

தேனாம்பேட்டை – 1,262

தண்டையார் பேட்டை – 1,160

வளசரவாக்கம் – 758

அம்பத்தூர் – 484

அடையாறு – 653

திருவொற்றியூர் – 344

மாதவரம் – 256

பெருங்குடி – 203

சோளிங்கநல்லூர் – 197

ஆலந்தூர் – 157

மணலி – 156 பேர், மற்ற மாவட்டங்களுக்கு மாற்றி அறிவிக்கப்பட்ட 80 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் சென்னையில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

Related Stories: