×

தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க கூடாது, மீறினால் நடவடிக்கை: அமைச்சர் செங்கோட்டையன்

சென்னை: தனியார் பள்ளிகள் ஆன்லைனில் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க கூடாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். பொது முடக்கத்தின் போது கல்விக்கட்டணத்தை வசூலித்தாலும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார். ஆன்லைனில் வகுப்புகள் எடுத்தாலும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என கூறினார். பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் பாடத்திட்டத்தை குறைப்பது தொடர்பாக ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது என கூறினார்.


Tags : Senkotayan Private ,schools , Private schools ,not take,students online, violation action, Minister Senkotayan
× RELATED சிறுத்தை நடமாட்டத்தால் அரியலூர்...