ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்க ஜெ.தீபாவிற்கு உரிமை உள்ளது: சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: ஜெயலலிதா சொத்துகளை நிர்வகிக்க ஜெ.தீபாவிற்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெயலலிதா சொத்துக்களில் ஒரு பகுதியை கொண்டு அறக்கட்டளை அமைக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது. ஜெ. சொத்துக்களை நிர்வகிக்க புகழேந்தி தாக்கல் செய்த மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்யப்பட்டது.  ஜெயலலிதா சொத்துக்கு தீபா, தீபக் இருவரையும் 2-ம் நிலை வாரிசாக ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது. வேதா இல்லத்தை நினைவு இல்லமாக மாற்றுவதை மறுபரிசீலனை செய்ய 8 வாரங்களில் அறிக்ககை தாக்கல் செய்ய தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories: