நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரகுடிநீர் வழங்கப்பட்டு வருகிறது: கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கபசுரகுடிநீர் வழங்கப்பட்டு வருகிறது என கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பேட்டி அளித்தார். ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டால் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் தொற்று ஏற்படுகிறது எனவும் கூறினார். நோய் வாராமல் தடுக்க முகக்கவசம் அணிவதை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும் கூறினார். சென்னையில் தொற்று அதிகம் உள்ள மண்டலங்களில் தனிக்கவனம் செலுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என தெரிவித்தார்.

Related Stories: