சென்னை: தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவால் ஒத்திவைக்கப்பட்ட 12ம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் திருத்தும் பணி தற்போது தொடங்கியுள்ளது. சென்னையை தவிர்த்து 202 மதிப்பீட்டு மையங்களில் 48 லட்சம் விடைத்தாள்களை திருத்தும் பணியில் 42,981 ஆசிரியர்கள் ஈடுபட்டுள்ளனர்.