மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரேநாளில் 97 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,792 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில் நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மாலை வரையிலான 24 மணிநேரத்தில் மேலும் 2,091 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மாநிலத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 54,758 ஆக அதிகரித்தது. அதேவேளையில் இதுவரை இல்லாத அளவுக்கு 24 மணி நேரத்தில் மும்பை உட்பட மாநிலத்தில் பல்வேறு அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 97 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.