மும்பையில் 39 பேர் உட்பட மகாராஷ்டிராவில் ஒரேநாளில் அதிகபட்சமாக 97 பேர் பலி

மும்பை: மகாராஷ்டிரா மாநிலத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரேநாளில் 97 பேர் கொரோனாவுக்கு பலியானார்கள். இதன் மூலம் மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,792 ஆக அதிகரித்துள்ளது. மகாராஷ்டிராவில்  நேற்று முன்தினம் மாலை முதல் நேற்று மாலை வரையிலான 24 மணிநேரத்தில் மேலும் 2,091 பேருக்கு வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, மாநிலத்தில் வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் மொத்த எண்ணிக்கை 54,758 ஆக அதிகரித்தது. அதேவேளையில் இதுவரை இல்லாத அளவுக்கு 24 மணி நேரத்தில் மும்பை உட்பட மாநிலத்தில் பல்வேறு அனுமதிக்கப்பட்டிருந்தவர்களில் 97 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர்.

இதனால், மகாராஷ்டிராவில் கொரோனாவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 1,795 ஆக அதிகரித்தது. கடந்த 19ம் தேதியன்று 74 பேர் உயிரிழந்ததுதான் ஒரேநாளில் அதிகபட்ச பலி எண்ணிக்கையாக இருந்தது. அதைவிட அதிகமாக நேற்று 97 பேர் கொரோனாவுக்கு பலியானது அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையே, மும்பையில் மட்டும் நேற்று 1,002 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. 39 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதன் மூலம் நகரில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 32,791 ஆகவும், பலி எண்ணிக்கை 1,065 ஆகவும் அதிகரித்துள்ளது.

Related Stories: