துபாய்: சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் இருந்து தாயகம் வர விரும்பும் இந்தியர்களை அழைத்து வர ‘வந்தே பாரத்’ திட்டம் தொடங்கப்பட்டு முதல்கட்டமாக ஏராளமான இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். தமிழகத்திற்கு துபாயிலிருந்து 2 விமானங்கள் இயக்கப்பட்டது .இது வரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் ஆனால் இரண்டாவது கட்ட நடவடிக்கையில் அதிர்ச்சிகரமாக தமிழகத்திற்கு ஒரு விமானம் கூட இல்லாதது பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் வசிக்கும் 3 லட்சத்திற்கும் அதிகமான தமிழர்களில், ஊர் திரும்ப ஆயிரக்கணக்கானோர் இந்திய அரசு வலைதளைங்களில் பதிவு செய்தவர்கள் அதிருப்தி தெரிவித்தனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள தமிழ் அமைப்புகளும் கணடனம் தெரிவித்தன.