நாகூரில் ரூ.1.3 லட்சத்துக்கு விற்கப்பட்ட 3 வயது பெண் குழந்தை மீட்பு

நாகை: நாகை மாவட்டம் நாகூரில் ரூ.1.3 லட்சத்துக்கு விற்கப்பட்ட 3 வயது பெண் குழந்தை கோவில்பட்டியில் மீட்கப்பட்டுள்ளது. குழந்தையை வளர்க்க முடியாததால் நண்பரிடம் கொடுத்து வளர்க்குமாறு கூறியிருந்தார் தந்தை. பிப். பெண் குழந்தையை வாங்கிய நண்பர் கோவில்பட்டியில் உள்ள ஒரு குடும்பத்துக்கு விட்டுவிட்டார். ஊரடங்கு காரணமாக 2 மாதம் கழித்து குழந்தையை பார்க்கச் சென்ற போது விற்றது தெரிந்ததால் தந்தை அதிர்ச்சி அடைந்தார். குழந்தைகள் நல அமைப்பினரிடம் புகார் அளிக்கப்பட்டதை அடுத்து கோவில்பட்டியில் இருந்து குழந்தை மீட்கப்பட்டுள்ளது.

Related Stories: