×

நாளை தொடங்குகிறது பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி; மையங்களின் எண்ணிக்கை 67-ல் இருந்து 202-ஆக அதிகரிப்பு...சென்னையில் மையம் இல்லை

சென்னை: கொரோனா பாதிப்பு காரணமாக விடைத்தாள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை 67-ல் இருந்து 202-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. தனி மனித இடைவெளியுடன் 10,746 ஆசிரியர்கள் 12ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணியில் நாளை ஈடுபடுகின்றனர். தமிழகம் முழுவதும் பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் பணி நாளை தொடங்குகிறது. சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விடைத்தாள்கள் திருத்தும் பணி இங்கு நடைபெறவில்லை. 12-ம் வகுப்பு தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை நடைபெற்றது. 8.5 லட்சம் மாணவர்கள் தேர்வை எழுதினர்.

இதற்கிடையில் கொரோனா வைரஸ் பரவியதால் விடைத்தாள் திருத்தும் பணி பாதிக்கப்பட்டது. பலமுறை ஒத்திவைக்கப்பட்ட திருத்தும் பணி மீண்டும் நாளை தொடங்குகிறது. 48 லட்சம் விடைத்தாள்கள் திருத்தும் பணி 67 மையங்களில் முதலில் நடைபெறுவதாக இருந்தது. இந்நிலையில் விடைத்தாள் திருத்தும் மையங்களின் எண்ணிக்கை 202 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. சென்னையில் கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் விடைத்தாள்கள் திருத்தும் பணி இங்கு நடைபெறவில்லை. இங்குள்ள விடைத்தாள்கள் வேறு மாவட்டங்களுக்கு மாற்றப்பட்டுள்ளது. விடைத்தாள்கள் திருத்தும் பணியில் 40 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுகிறார்கள்.

ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் மையங்களில் கொரோனா தொற்று ஏற்படாமல் தடுப்பதற்காக பல்வேறு நடவடிக்கைகளை கல்வித்துறை எடுத்துள்ளது. கிருமி நாசினி தெளித்தல், சமூக இடைவெளி விட்டு பணி செய்தல், முகக்கவசம் அணிதல் போன்றவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த பணியில் ஈடுபடுகின்ற ஆசிரியர்களுக்கு மறுமுறை பயன்படுத்தக்கூடிய 3 முகக்கவசங்கள் வழங்கப்படுகிறது. மையங்களில் ஆசிரியர்கள் ஒன்றாக கூடுவதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. விடைத்தாள் திருத்தும் பணி காலை 9 மணிக்கு தொடங்கும். தமிழ், ஆங்கிலம் மொழி பாடங்களுக்கான விடைத்தாள்கள் காலையில் 15, மாலையில் 15 விடைத்தாள்கள் திருத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Tags : answer sheet editing ,centers ,Chennai , Plus-2, Answer Sheet, Editing, Madras
× RELATED கடலூரில் வாக்குச்சாவடி அலுவலர்களுக்கு இறுதிக்கட்ட பயிற்சி..!!