ராஜநாகத்தை தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டும் நபர்: சமூக வலைத்தளங்களில் வீடியோ வைரல்

மிகப்பெரிய ராஜநாகத்தை தலையில் தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டும் வீடியோவை வனத்துறை அதிகாரியான சுசாந்தா நந்தா பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக IFS அதிகாரி சுசாந்தா நந்தா பகிர்ந்த டிவிட்டர் பதிவில்; அசாதாரணமான ஒரு புத்துணர்ச்சியூட்டும் குளியல் அனுபவிப்பதைக் காட்டுகிறது. இது நீங்கள் இதற்கு முன்பு பார்த்திராத ஒன்று. மேலும், இதுபோன்ற வாய்ப்பு ஏற்பட்டால் நீங்கள் வீட்டில் முயற்சி செய்ய வேண்டிய ஒன்றல்ல இது எனவும் குறிப்பிட்ட அவர் ஒரு வீடியோவையும் பகிந்துள்ளார். அந்த வீடியோவில் வாவா சுரேஷ் பெரிய ராஜநாகத்தை தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டுகிறார்.

வாவா சுரேஷ் வனவிலங்கு ஆர்வலர் மற்றும் பாம்பு நிபுணர் எனவும் கூறப்படுகிறது. குடியிருப்பு பகுதியில் வரும் பாம்புகளை பாதுகாப்பாக பிடித்து வழக்கமாக வனத்திற்குள் விடுவதை வாவா சுரேஷ் கொண்டுள்ளார். இந்த வீடியோ பகிரப்பட்ட சில மணி நேரங்களில் பல்லாயிரக்கணக்கான பார்வைகளைப் பெற்றது இந்த வீடியோ. பலரும் ஆச்சரியத்தில் கருத்திட்டு வருகின்றனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Related Stories: