மிகப்பெரிய ராஜநாகத்தை தலையில் தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டும் வீடியோவை வனத்துறை அதிகாரியான சுசாந்தா நந்தா பகிர்ந்துள்ளார். இது தொடர்பாக IFS அதிகாரி சுசாந்தா நந்தா பகிர்ந்த டிவிட்டர் பதிவில்; அசாதாரணமான ஒரு புத்துணர்ச்சியூட்டும் குளியல் அனுபவிப்பதைக் காட்டுகிறது. இது நீங்கள் இதற்கு முன்பு பார்த்திராத ஒன்று. மேலும், இதுபோன்ற வாய்ப்பு ஏற்பட்டால் நீங்கள் வீட்டில் முயற்சி செய்ய வேண்டிய ஒன்றல்ல இது எனவும் குறிப்பிட்ட அவர் ஒரு வீடியோவையும் பகிந்துள்ளார். அந்த வீடியோவில் வாவா சுரேஷ் பெரிய ராஜநாகத்தை தண்ணீர் ஊற்றி குளிப்பாட்டுகிறார்.