டெல்லி: இந்தியாவில் கொரோனாவில் இருந்து குணமடைவோர் விகிதத்தில் தொடர்ந்து முன்னேற்றம் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. குணமடைவோர் விகிதம் 41.61%ஆகவும், இந்தியாவில் கொரோனாவால் உயிரிழந்து வருவோர் விகிதம் மிகக்குறைவாக 2.87%ஆக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று செய்தியாளர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது; இந்தியா முழுவதும் கொரோனா நோயிலிருந்து இதுவரை மொத்தம் 60,490 நோயாளிகள் மீண்டுள்ளனர். இதன் காரணமாக மீட்பு வீதம் தொடர்ந்து மேம்பட்டு வருகிறது. தற்போது இது 41.61% ஆக உள்ளது. மேலும், கொரோனா தொற்று பாதித்து உயிரிழப்போர் விகிதம் உலகிலேயே மிகவும் குறைவாக உள்ளது.