டெல்லி: வட மாநிலங்களில் அடுத்த 3 நாட்களுக்கு கடுமையான வெப்பநிலை பதிவாகும் என்பதால் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. டெல்லி, பஞ்சாப் ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் கடுமையான வெயில் வாட்டி வருகிறது. சாலையில் நடக்க முடியாத நிலையில் கானல் நீர் பரவி உஷ்ண காற்று வீசுவதால் மக்கள் தவித்து வருகின்றனர். இதனிடையே வட மாநிலங்களில் வரும் 28-ம் தேதி வரை 47 டிகிரி செல்ஸியஸ் அளவுக்கு கடுமையான வெயில் பதிவாகும் என்று தேசிய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதனால் டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான், உத்திரபிரதேசம், மத்திய பிரதேசம், மகாராஷ்டிரா உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.