விமானத்தின் நடு இருக்கையிலும் பயணிகளை ஏற்றி வர 10 நாட்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

டெல்லி : விமானத்தின் நடு இருக்கையிலும் பயணிகளை ஏற்றி வர 10 நாட்களுக்கு உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.கொரோனா முடியும் வரை விமானத்தின் நடு இருக்கையை காலியாக வைத்து இயக்க உத்தரவிடக் கோரி வழக்கு தொடரப்பட்டது.விமானி தேவன் கனானி என்பவர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.வெளிநாடுகளில் சிக்கியுள்ளவர்களை அழைத்து வந்த போது உரிய விதிமுறைகளை கடைபிடிக்கப்படவில்லை என மனுதாரர் குற்றம் சாட்டி இருந்தார்.சான் பிரான்ஸிஸ்கொ - மும்பை இடையிலான விமானத்தில் நடு இருக்கையிலும் பயணிகளை அமரவைத்ததாக வழக்கு தொடரப்பட்டு இருந்தது.இந்த வழக்கு விசாரணையின் போது,  ஏற்கனவே பயணிகள் முன்பதிவு செய்துள்ளதால் 10 நாட்கள் நடு இருக்கையில் அமர உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.

Related Stories: