தூத்துக்குடி: தூத்துக்குடி டூவிபுரத்தில் தூய யாக்கோபு ஆலயம் உள்ளது. இங்குள்ள கோபுரத்தின் மேல்பகுதிக்கு கடந்த சில நாட்களாக வித்தியாசமான தோற்றத்தில் சில பறவைகள் வந்துள்ளன. இவற்றின் சப்தமும் வித்தியாசமாக இருந்ததால் அங்கிருந்த கோவில் நிர்வாகிகள் மேலே சென்று அதனை பார்த்துள்ளனர். இதில் அந்த அங்கு 5 ஆந்தைகள் இருந்துள்ளன. அவை வழக்கமான ஆந்தைகளை போல அல்லாமல் முகம் மற்றும் முன் பகுதி வெண்மையாகவும், முதுகு பகுதி கறுப்பு மற்றும் பிரவுண் நிறத்தில் உடல் முழுவதும் புள்ளிகளாகவும் இருந்துள்ளது. அவர்கள் அதனை மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைக்க முடிவு செய்துள்ளனர்.