சென்னை: வழக்கமான பரிசோதனைக்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நுங்கம்பாக்கம் நெல்சன் மாணிக்கம் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஓ.பன்னீர்செல்வம் அனுமதிக்கப்பட்டுள்ளார். நேற்று இரவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட துணை முதல்வருக்கு ஆஞ்சியோ சிகிச்சை நடந்ததாகவும் மருத்துவமனை நிர்வாகம் தகவல் தெரிவித்ததாக கூறப்படுகிறது.