புதுச்சேரியில் கொரோனா பாதிப்பு 49ஆக உயர்வு.. சமூக பரவலாக தொடங்கிவிட்டதாக அச்சம்! : புதுச்சேரி சுகாதாரத்துறை

புதுச்சேரி : புதுச்சேரியில் மேலும் 2 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் புதுச்சேரியில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை49ஆக உயர்ந்துள்ளது. புதுச்சேரியில் தற்போது 27 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 14 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளதாக சுகாதாரத்துறை தகவல் அளித்துள்ளது.இந்த நிலையில் புதுச்சேரி கொரோனா வைரஸ் சமூக பரவலாக மாற தொடங்கிவிட்டதாக அச்சம் எழுந்துள்ளது என சுகாதாரத்துறை இயக்குநர் கூறியுள்ளார். மக்கள் எச்சரிக்கையுடன் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

Related Stories: