பிரிமியர் லீக் கால்பந்து மேலும் 2 வீரர்களுக்கு கொரோனா தொற்று

லண்டன்: இங்லிஷ் பிரீமியர் லீக் கால்பந்து போட்டி தொடங்குவதற்கு முன்பு வீரர்கள், பயிற்சியாளர்களுக்கு கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டதில் மேலும் இரண்டு வீரர்களுக்கு தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.   பிரீமியர் லீக் தொடரில் விளையாடும் 20 அணிகளின் வீரர்கள், பயிற்சியாளர்கள், அலுவலர்கள் என அனைவருக்கும் கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. மே 17ம் தேதி தொடங்கிய முதல்கட்ட மருத்துவ பரிசோதனையில் 748 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 6 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டது. அதனால் உடனடியாக அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். இந்நிலையில் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனை கடந்த 3 நாட்களாக 996 பேருக்கு  செய்யப்பட்டது.  அதன்முடிவுகள் நேற்று வெளியான நிலையில் மேலும் 2பேருக்கு கொரோனா  தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை பரிசோதனை செய்யப்பட்ட 1744 பேரில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களில் ஒருவர் வாட்ஃபோர்டு கிளப் பாதுகாவலர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: