கராச்சி: பாகிஸ்தானின் லாகூரில் இருந்து கராச்சி சென்ற பாகிஸ்தான் விமானம் விபத்துக்குள்ளாகி 91 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்து பற்றி விமான போக்குவரத்து இயக்குநரகத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கை குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. அதில் கூறப்பட்டுள்ள தாவது:,விமானி முதல் முறை விமானத்தை தரையிறக்க முயன்ற போது, 3 முறை இன்ஜின் தரையுடன் உரசி தீப்பொறி பறந்துள்ளது. நான்காவது முறையாக முயற்சிக்கும் போதுதான் விபத்து நிகழ்ந்துள்ளது. இன்ஜின் தரையில் உரசியதால் அதன் எரிபொருள் டேங்க் மற்றும் பம்ப்பில் சேதம் ஏற்பட்டு செயல் இழந்துள்ளது.