போக்குவரத்து துறையில் கூடுதல் கமிஷனர் நியமனம்

சென்னை: தமிழக போக்குவரத்துத்துறைக்கு புதிய கூடுதல் கமிஷனராக மணக்குமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: போக்குவரத்து துறையில் கூடுதல் கமிஷனர் பணியிடம் காலியாக உள்ளது. எனவே அதை நிரப்ப வேண்டும் என போக்குவரத்துத்துறை ஆணையரகத்திலிருந்து கடிதம் அனுப்பப்பட்டது. இதை அரசு பரிசீலனை செய்தது. பிறகு, தற்போது போக்குவரத்துத்துறையில் இணை கமிஷனராக (விதிகள்) பணியாற்றி வரும் மணக்குமாருக்கு, கூடுதல் கமிஷனராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: