கேரளாவில் திடீரென வேகமெடுக்கும் கொரோனா; நேற்று 63, இன்று 53..வெளிநாட்டில் இருந்து வருபவர்களால் அதிகம் பாதிப்பு

திருவனந்தபுரம்: கேரளாவில் ஒரே நாளில் 53 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கேரளாவில் இதுவரை 847 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 520 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்று புதிதாக பாதிக்கப்பட்டுள்ள 53 பேரில் 18பேர் வெளிநாடுகளில் இருந்தும், 29பேர் வெளிமாநிலங்களில் இருந்தும் கேரளா வந்தவர்கள் ஆகும். கேரள அரசு சிறப்பாக செயல்பட்டு கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்த நிலையில், தற்போது அங்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணம் உள்ளன.

இந்தியாவின் முக்கியமான நகரங்களான டெல்லி, மும்பை, சென்னையி்ல கொரோனா வைரஸ் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில் கேரளா சிறப்பாக செயல்பட்டு மாநிலம் முழுவதும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்தது. கடந்த இரண்டு வாரங்களாக வெளிநாட்டில் சிக்கித்தவிக்கும் இந்தியர்களை அழைத்துவரும் வேலை நடைபெற்று வருகிறது. அதேபோல் மற்ற மாநிலங்களில் சிக்கித்தவிக்கும் நபர்கள் சொந்த மாநிலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். வெளிநாட்டில் இருந்து வரும் விமானங்களில் பெரும்பாலானவை கேரள மாநிலம் சர்வதேச விமான நிலையங்களில் தரையிறக்கப்படுகின்றன. அந்த விமானங்கள் மூலம் வந்தவர்களில் சிலருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதேபோல் வேறு மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கும் கொரோனா தொற்று உறுதியாகி வருகிறது. இதனால் ஒன்று, இரண்டு என இருந்த கோரோனா பாதிப்பு கடந்த ஒரு வாரமாக அதிகரித்த வண்ணம் உள்ளன. நீண்ட நாட்களுக்குப் பிறகு நேற்று கொரோனா பாதிப்பு 63 ஆக உயர்ந்தது. இந்நிலையில் இன்று 53 ஆக உயர்ந்துள்ளது. இதில் 18 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள். 29 பேர் வெளி மாநிலத்தில் இருந்து வந்தவர்கள் என கேரள மாநில சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இன்றைய நிலவரப்பு 322 பேர் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளையில் 520 பேர் குணமடைந்துள்ளனர்.

Related Stories: