×

புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வு; விற்கப்படும் சாராயத்திற்கு 20% கொரோனா வரி: அரசாணை வெளியீடு

புதுச்சேரி: தமிழகத்தின் டாஸ்மாக் விலைக்கு நிகராக புதுச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தில் விற்கப்படாத மதுபானங்களை புதுச்சேரியில் விற்றால் கூடுதலாக 25% கொரோனா வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும் புதுச்சேரியில் விற்கப்படும் சாராயத்துக்கும் 20% கொரோனா வரி விதித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக கடந்த மார்ச் 25ம் தேதி முதல் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

கடந்த 17ம் தேதி முதல் ஒரு சில தளர்வுகளுடன் 4ம் கட்ட ஊரடங்கு வரும் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. ஊரடங்கு காரணமாாக பல்வேறு மாநிலங்களில் வரி வருவாய் இழப்பு ஏற்பட்டது. இதனையடுத்து நாடு முழுவதிலும் பல்வேறு மாநிலங்கள் தங்களின் வரி வருவாயை பெருக்கி கொள்ள மதுகடைகளை திறந்தன. தமிழகத்திலும் சென்னை தவிர மற்ற பகுதிகளில் மதுக்கடைகள் திறக்கப்பட்டு மது விற்பனை நடைபெற்று வருகிறது. புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்க ஆளுநர் கிரண் பேடி அனுமதி அளிக்கமால் இருந்த நிலையில் நேற்று மது கடைகள் திறக்கலாம் என அறிவித்தார்.

இந்த நிலையில் புதுச்சேரியில் மதுபானங்கள் விலை உயர்வு அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழகத்தின் டாஸ்மாக் விலைக்கு நிகராக புதுச்சேரியில் மதுபானங்கள் விலையை உயர்த்தி புதுச்சேரி அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் விற்கப்படாத மதுபானங்களை புதுச்சேரியில் விற்றால் கூடுதலாக 25% கொரோனா வரி விதிக்கப்படும் என்றும் புதுச்சேரியில் விற்கப்படும் சாராயத்திற்கு 20% கொரோனா வரி விதித்தும் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.  இதனால் புதுச்சேரி மற்றும் தமிழகத்தில் ஒரே விலைக்கு மது விற்பனை நடைபெற உள்ளது.

Tags : Corona ,Puducherry , Puducherry, Brewery, Prices, Corona Tax
× RELATED கரூர் நகரப்பகுதியில் கால்சியம்,...