மதுரை: மதுரை திருப்பரங்குன்றம் அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளார். வெள்ளக்கல் பகுதியில் காரில் வந்த மர்ம கும்பல் சுப்ரமணி என்பவரை கொலை செய்து விட்டு தப்பியது. சுப்ரமணியை கொலை செய்து விட்டு காரில் தப்பிச் சென்ற மர்ம கும்பல் குறித்து போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.