கோவா: கொரோனா இல்லாத மாநிலமாக திகழும் கோவாவில், உள்ளூர் பயணிகள் சுற்றுலாதலங்களுக்கு வரத் தடையில்லை என அம்மாநில ஆளுநர் சத்யபால் மாலிக் தெரிவித்துள்ளார். சுற்றுலாவுக்கு பெயர் போன கோவா மாநிலத்தில் ஆரம்பத்தில் கொரோனா வைரஸால் பாதிப்பு மிகவும் குறைவாக இருந்தது. வெறும் 7 பேருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானது. அவர்களும் குணம் அடைந்ததையடுத்து கொரோனா வைரஸ் இல்லாத மாநிலமாக கொரோனா வைரஸ் அறிவிக்கப்பட்டது. ஆனால் யாரும் எதிர்பாராத வண்ணம் அண்மையில் திடீரென கொரோனா வைரஸ் பரவ தொடங்கியுள்ளது. தற்போது மொத்தம் 39 பேர் கோவாவில் கொரோனா வைரசுக்கு சிகிச்சை எடுத்து வருகின்றனர்.