மகாராஷ்டிராவில் பாதிப்பு 47,000-ஐ தாண்டியது: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1.31 லட்சமாக உயர்வு; 3,867 பேர் பலி

டெல்லி: இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1 லட்சத்து 31 ஆயிரத்தை தாண்டியது. உலகையே ஆட்டிப்படைக்கும் கொரோனா வைரஸ்   இந்தியாவிலும் காட்டுத்தீ போல பரவி வருகிறது. ஆட்கொல்லி கொரோனா வைரஸால் இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,31,868 ஆக அதிகரித்துள்ளது. கடந்த   24 மணிநேரத்தில் மட்டும் 6,767 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 147 பேர் உயிரிழந்துள்ளதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது. கொரோனாவால்   இதுவரை 3,867 பேர் உயிரிழந்த நிலையில், 54,441 பேர் கொரோனா பிடியில் இருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

இந்தியாவில், அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 47,190 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 1,577 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 13,404 பேர்   குணமடைந்துள்ளனர். இந்த வரிசையில் தமிழகம் மீண்டும் 2-வது இடத்திற்கு வந்துள்ளது. தமிழகத்தில் 15,512 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.   இதுவரை 103 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 7491 பேர் குணமடைந்துள்ளனர். குஜராத் மாநிலம் 3-வது இடத்தில் உள்ளது. குஜராத் மாநிலத்தில் 13,664 பேருக்கு தொற்று    உறுதி செய்யப்பட்டுள்ளது. அங்கு, 829 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 6169 பேர் குணமடைந்துள்ளனர்.  

மாநில வாரியாக விவரம்:

அசாமில் 329 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 55 பேர் குணமடைந்தது.

பீகாரில் 2380 பேருக்கு பாதிப்பு; 11 பேர் பலி; 653 பேர் குணமடைந்தது.

சண்டிகரில் 225 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 179 பேர் குணமடைந்தது.

சத்தீஸ்கரில் 214 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 64 பேர் குணமடைந்தது.

கோவாவில் 55 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 16 பேர் குணமடைந்தது.

டெல்லியில் 12,910 பேருக்கு பாதிப்பு; 231 பேர் பலி; 6267 பேர் குணமடைந்தது.

அரியானாவில் 1131 பேருக்கு பாதிப்பு; 16 பேர் பலி; 750 பேர் குணமடைந்தது.

திரிபுராவில் 189 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 153 பேர் குணமடைந்தது.

கேரளாவில் 795 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 515 பேர் குணமடைந்தது.

ராஜஸ்தானில் 6742 பேருக்கு பாதிப்பு; 160 பேர் பலி; 3786 பேர் குணமடைந்தது.

ஜார்கண்டில் 350 பேருக்கு பாதிப்பு; 4 பேர் பலி; 141 பேர் குணமடைந்தது.

லடாக்கில் 49 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 43 பேர் குணமடைந்தது.

மணிப்பூரில் 29 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 4 பேர் குணமடைந்தது.

மேகலாயாவில் 14 பேருக்கு பாதிப்பு; 1 பேர் பலி; 12 பேர் குணமடைந்தது.

மிஸ்ரோமில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

ஒடிசாவில் 1269 பேருக்கு பாதிப்பு; 7 பேர் பலி; 497 பேர் குணமடைந்தது.

பாணடிச்சேரி 26 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 10 பேர் குணமடைந்தது.

பாஞ்சாப்பில் 2045 பேருக்கு பாதிப்பு; 39 பேர் பலி; 1870 பேர் குணமடைந்தது.

உத்தரகாண்ட்டில் 244 பேருக்கு பாதிப்பு; 2 பேர் பலி; 56 பேர் குணமடைந்தது.

கர்நாடகாவில் 1959 பேருக்கு பாதிப்பு; 42 பேர் பலி; 608 பேர் குணமடைந்தது.

ஜம்மு காஷ்மீரில் 1569 பேருக்கு பாதிப்பு; 21 பேர் பலி; 774 பேர் குணமடைந்தது.

தெலுங்கானாவில் 1813 பேருக்கு பாதிப்பு; 49 பேர் பலி; 1065 பேர் குணமடைந்தது.

மேற்கு வங்கத்தில் 3459 பேருக்கு பாதிப்பு; 269 பேர் பலி; 1281 பேர் குணமடைந்தது.

ஆந்திரப்பிரதேசத்தில் 2757 பேருக்கு பாதிப்பு; 56 பேர் பலி; 1809 பேர் குணமடைந்தது.

மத்தியப்பிரதேசத்தில் 6371 பேருக்கு பாதிப்பு; 281 பேர் பலி; 3267 பேர் குணமடைந்தது.

உத்தரப்பிரதேசத்தில் 6017 பேருக்கு பாதிப்பு; 155 பேர் பலி; 3406 பேர் குணமடைந்தது.

அருணாச்சலப்பிரதேசத்தில் 1 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 1 பேர் குணமடைந்தது.

இமாச்சலப்பிரதேசத்தில் 185 பேருக்கு பாதிப்பு; 3 பேர் பலி; 61 பேர் குணமடைந்தது.

அந்தமானில் நிக்கோபார் தீவுகளில் 33 பேருக்கு பாதிப்பு; 0 பேர் பலி; 33 பேர் குணமடைந்தது.

தாதர் நகர் ஹவேலியில் 2 பேருக்கு பாதிப்பு; யாரும் குணமடையவில்லை; உயிரிழக்கவில்லை.

Related Stories: