சென்னை: திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிவிப்பு: திமுக மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நாளை (இன்று) காலை 10 மணியளவில் எனது தலைமையில் காணொலிக் காட்சி வாயிலாக நடக்கிறது. அதுபோது மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன். இக்கூட்டத்தில் திமுக நிர்வாகிகள் மீது முதல்வர் மற்றும் அதிமுக அமைச்சர்களின் தூண்டுதலில் பொய் வழக்குகள் புனைவது, சட்டவிரோத-ஜனநாயக விரோத காவல்துறை கைதுகள் பொருள் குறித்து விவாதிக்கப்படுகிறது.