புதுடெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் மத்திய நிதியமைச்சருமான ப.சிதம்பரம் நேற்று தனது டிவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது: நாட்டின் தேவை சீர்குலைந்துள்ளது. 2020-2021ம் ஆண்டு வளர்ச்சி எதிர்மறையாக சென்று கொண்டிருக்கிறது என ரிசர்வ் வங்கி கவர்னர் கூறுகிறார். பின்னர், பிரதமர் மோடி அதிக பண புழக்கத்தை ஏன் உட்செலுத்துகிறார்? ‘கடமையை செய்யுங்கள்; நிதி நடவடிக்கைகளை எடுங்கள்’ என அரசுக்கு ரிசர்வ் வங்கி ஆளுநர் மூடி மறைக்காமல் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும்.