பிரேசில் : பிரேசில் நாட்டின் மிகப் பெரிய நகரமான சாவோ பவுலோவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களை அடக்கம் செய்யும் வகையில் பிரமாண்டமான கல்லறை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. பிரேசிலில் கடந்த 24 மணி நேரத்தில் 1,001 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அங்கு கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 3,30,890 ஆக அதிகரித்துள்ளது. தற்போது தொற்று அதிகம் ஏற்பட்ட நாடுகளில் பிரேசில் இரண்டாம் இடத்தில் உள்ளது. பிரேசிலில் கொரோனா தொற்றுக்கு 21,116 பேர் பலியாகி உள்ளனர்.